எஜமானர்கள் வீட்டில் இல்லாத சமயம் 5 பிஸ்கட் சாப்பிட்ட சிறுமியின் உள்ளங்கையை கற்பூரம் ஏற்றிக் கருக்கிய கொடுமை
கண்டி மாவட்டத்தின் மொரஹாஹேன பிரதேசத்தில் எஜமானர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 பிஸ்கட்டுகளை சாப்பிட்டதற்கு தண்டனையாக 14 வயதேயான சிறுமி ஒருவரின் உள்ளங்கைகளில் கற்பூரமேற்றிய கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான எஜமானாரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்துபசாரமொன்றுக்காக ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளரும் அவரின் மனைவியும் சென்றிருந்த போதே குறித்த சிறுமி பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைகளில் கற்பூரமேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரஹாஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துரைகள்:
Post a Comment