சாலிகிராமம் மதியழகன் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவரது மனைவி சத்யா (25). இவர்களுக்கு வைஷ்ணவி (4) என்ற பெண் குழந்தை உள்ளது.
கணேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதையடுத்து குடும்ப செலவிற்காக சத்யா வேலைக்கு சென்று வந்தார். இதனால் கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு உருவானது.
அப்போது வீட்டில் இருந்த குழந்தை வைஷ்ணவியை கணேசனின் பாட்டி பட்டம்மாள் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கணேசன் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த அவர் அருகில் நின்று கொண்டிருந்த மனைவி சத்யாவையும் ஓடிச்சென்று பிடித்துக் கொண்டார்.
இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.இன்று காலை சத்யாவும் இறந்து போனார். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
0 கருத்துரைகள்:
Post a Comment