மேலும் செய்திகள்

பார்வையிழந்த நாயை பராமரிக்கும் வாத்து

போலந்தில் கண் பார்வையற்ற நிலையில் வாழ்ந்து வரும் நாயொன்றை வாத்து ஒன்று பராமரித்து வருகின்றது.

பட்டன் எனப் பெயரிடப்பட்ட நான்கு வயதுடைய மேற்படி வாத்தானது பாக் எனப்படும் பார்வையிழந்த நாயை எப்போதும் தனது கழுத்தில் கொழுவிக் கொண்டு அல்லது சத்தமிடுவதன் மூலம், எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என வழி காட்டுகின்றது.


இந்த பிராணிகளை வளர்த்து வரும் உரிமையாளரான ரெனாட்டா குர்ஸா (வயது 47) இது தொடர்பாக தெரிவிக்கையில்,

'கடந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்தில் எனது நாயான பாக்கின் கண்கள் பறிப்போனது. இதனால் நான் மனமுடைந்து போனேன். ஆனால், கடவுளின் கிருபையால், பட்டன்ஸ் எனும் இந்த வாத்து பாக்கை பாராமரித்துக் கொள்கிறது' என்றார்.

'பட்டன்ஸ், பாக்கை தனது பாதங்களால் பிடித்துக் கொள்வதுடன் அதனுடன் பயணம் செய்கின்றது. அவை இரண்டையும் இப்போது பிரிக்க முடியாது' என்கிறார் ரெனாட்டா

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes