மேலும் செய்திகள்

யாழ்.குடாநாட்டில் மாவீரர்களை நினைவு கொள்ளும் வகையிலுமான சுவரொட்டிகள்



குடாநாட்டில் அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நிலைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நகரின் சிலபகுதிகளில் மாவீரர்களை கௌரவிக்கும் வகையிலும் மாவீரர் நாளை நினைவு கொள்ளும் வகையிலுமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
நகர்ப்பகுதியில் அதிகளவு படைப்புலனாய்வாளர்களும் படையினரும் இறக்கப்பட்டு வீதிச்சோதனை நடவடிக்கைகளும் ரோந்து நடவடிக்கைகளும் கடந்த 3நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றய தினம் யாழ்.இந்துக்கல்லூரி நீராவியடி மற்றும் பெருமாள்கோவிலடி நகர்ப்பகுதி ஆகியவற்றில் வெள்ளைத்தாளில் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இவற்றில் பலவற்றை அதிகாலைவேளையே இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.
மேலும் சில சுவரொட்டிகள் படையினரால் அடையாளம் காணப்படாத நிலையில் இரவு வரையில் அகற்றப்படாமலேயே இருந்ததை காணமுடிந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes