பிரான்சின் சிறிய மலைக் கிராமமான Bugarach உலகப் புகழ் பெற்றதாகிவிட்டது. மாயனின் கணக்கின் படி 2012 டிசம்பர் 21ம்
திகதியளவில் உலகம் அழிந்து விடும் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவுவதோடு பல இடங்களில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்டுகின்றது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாயனின் கணக்கின் படி உலகம் அழியும் போது மிக அரிதாக உலகின் சில பகுதிகள் மட்டுமே காப்பாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் Bugarach எனும் பிரஞ்சுக் கிராமமும் அடங்குகின்றது. இது போதாதா? எல்லோரும் இங்கு படையெடுக்க ஆயத்தம் செய்ய ஆரம்பிப்பார்களே! அதைபப் பற்றிப் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களும் அறிந்து கொள்ளுங்களேன்.
இங்கு புகழ்பெற்ற மலைக் கீழ்ச் சுரங்கங்கள் நிலக்கீழ் வழிகள் உள்ளன. இவை பூமியழிவிலிருந்து இக்கிராமத்தைக் காத்துவிடும் என்று நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் இக்காலப்பகுதியில் அங்கு செல்ல நினைப்போருக்கு ஆப்பு தயாராக உள்ளது. ஆம் இக் கிராமத்திற்கும் இதன் நிலக்கீழ்ச் சுரங்கங்களுக்கும் செல்வதற்கு டிசம்பர் 21ம் திகதிக்கு முதல் மூன்று நாட்களும் டிசம்பர் 21ம் திகதியும் அதன் பின்னரான மூன்று நாட்களும் இங்கு வெளியாட்கள் செல்வதை சட்டமா அதிபர் Eric Freysselinard தடை செய்துள்ளார்.
இந்த « ஒளிமயமான » இடத்தை நோக்கிப் பெருந் தொகையான மக்கள் அடைக்கலம் புக வருவார்கள் என்றும் அதனைத் தடுக்கும் வகையிலேயே இத் தடை உத்தரவை நிறைவேற்றியும் உள்ளார். இவ்வறிவித்தலை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்தின் அழகிற்கும் இங்கு வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் பெருந்தொகையானோரின் வருகை இடையூறு விளைவிக்கும் என்பதாலேயே அத் தடை உத்தரவைப் பிற்ப்பித்துள்ளதாக Eric Freysselinard கூறியுள்ளார்.
« ஏற்கனவே கடந்த வருடம் கூட்டம் கூட்டமாக வந்து உலகம் அழியும் போது இங்கு « ஒளியானவர் » தோன்றுவார் என்று கூறி அனைவரையும் கலவரமடையச் செய்தனர். இதனாலேயே இப்பகுதியை, இப்பகுதி மக்களுக்காகவே பாதுகாக்க விரும்புகிறேன். அப்படியே 'ஒளியானவர் தோன்றினாலும் அவரை பிரான்சின் இராணுவம் ஒன்றும் தடுக்கப்போவதில்லை » என்றார் சட்டமா அதிபர்.
0 கருத்துரைகள்:
Post a Comment