மேலும் செய்திகள்

மூன்று வயதுச் சிறுமி மீது 63 வயதுச் சாரதி பாலியல் தொல்லை!

மூன்று வயதுச் சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு -கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 63 வயது சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வானில் பாடசாலை மாணவர்களை ஏற்றி, இறக்குகின்றவர். வானில் வைத்தே சிறுமி குற்றம் புரிந்து வந்துள்ளார்.


சிறுமி இவரின் தொல்லை தாங்காமல் பெற்றோருக்கு முறையிட்டார். பெற்றோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு முறைப்பாடு செய்தனர்.

இதை அடுத்தே கைது இடம்பெற்றது. வயோதிப சாரதி நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதி ஒருவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும் என்று அதிகார சபையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes