April 25, 2011
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் மிகப்பெரிய ஜெயில் உள்ளது. அங்கு அரசியல் கைதிகள் மற்றும் தலிபான் தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த ஜெயிலில் உள்ள தெற்கு பகுதியில் சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் சுமார் 360 மீட்டர் நீளத்துக்கு தலிபான்கள் சுரங்க பாதை அமைத்தனர்.இதை தொடர்ந்து நேற்று இரவு 11 மணியளவில் அந்த சுரங்கபாதை வழியாக 541 தலிபான் தீவிரவாதிகள் தப்பினர். அவர்களில் 106 பேர் தலிபான் கமாண்டர்கள்.
இந்த தகவலை கந்தகார் சிறை துறை டைரக்டர் ஜெனரல் குலாம் தஸ்தகீர் மயார் தெரிவித்தார்.இது கடந்த 3 ஆண்டுகளில் இங்கு நடந்த 2-வது மிகப்பெரிய சம்பவமாகும். கடந்த 2008-ம் ஆண்டு வெடிகுண்டுகள் ஏற்றிய டிரக்கால் மோதி ஜெயில் தகர்க்கப்பட்டது.இதை தொடர்ந்து 1000 தலிபான்கள் தப்பினர்



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment