மேலும் செய்திகள்

இராணுவத்திடம் சரணடைந்த கதிர் சுட்டுக்கொலை: புதிய ஆதாரம் !

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், அரசியல் தலைவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது மேலும் வெளிவந்துள்ள ஆதரங்களால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது
. இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலித்தேவன், ப.நடேசன் உட்பட பல போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இராணுவத்திடம் சரணடைந்த கதிர் என்னும் போராளியும் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் கேணல் ரமேஷ் அவர்களின் படம் வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், போராளி கதிர் அவர்களின் படமும் வெளியாகியுள்ளது.


கதிர் என்று அழைக்கப்படும் போராளி, கைகள் கட்டப்பட்ட நிலையில் இராணுவத்தால் நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட நிலையில் உள்ள புகைப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதில் உயிருடன் உள்ள பல போராளிகள் தற்போது கொல்லப்பட்டு உள்ளனர். அதற்கான புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இப் புகைப்படத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள போராளி கதிர் என்பவரை இலங்கை இராணுவம் சித்திரவதைகளின் பின்னர் கொலைசெய்துள்ளது ஆதாரங்களோடு நிரூபனமாகியுள்ளது.

இதனை ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கும், சட்டத்துக்கு புறம்பான கொலக்களுக்கான ஐ.நாவின் அதிகாரிக்கும் நாம் அனுப்பியுள்ளோம். இப் புகைப்பட ஆதாரங்கள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான கொலைகளையும், மனித உரிமைமை மீறல்களையும் மற்றும் போர் குற்றங்களையும் எமக்கு தெளிவுபடுத்தி நிற்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes